ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கிய நிலையில் 15 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், ஸ்ரீகாந்த் மற்றும் விமல் ஆகிய 3 இளைஞர்கள் உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்கள் 3 பேரில் விமல், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேரும் கரையேறியுள்ளனர். ஆனால் விக்னேஷ் மட்டும் தண்ணீரில் தத்தளித்துள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய விக்னேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் சுமார் 15 மணி நேர தேடுதலுக்கு பிறகு விக்னேஷ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 26 அடி ஆழம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’