புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்காக நாளை சென்னையிலிருந்து மணிப்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இந்தச் சிறப்பு ரயில் நாளை காலை 10 மணிக்குப் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு மணிப்பூர் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இன்று கோவையிலிருந்து 1140 புலம்பெயர் தொழிலாளர்களுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் அக்பர்பூருக்கு புறப்பட்டுச் சென்றது ஷராமிக் சிறப்பு ரயில். கோவையிலிருந்து புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அவர்களை ரயிலின் உள்ளே அமர வைக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தொழிலாளர்கள் செல்வதற்கான செலவுகளைத் தமிழக அரசே ஏற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து இரண்டாவது ஷராமிக் சிறப்பு ரயில் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து மணிப்பூர் புறப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!