ஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை பொதுமக்களின் வீட்டிலேயே கொடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ஃபீலா ராஜேஷ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதியில் மட்டும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க 100 சதவீதம் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் மக்கள் நடமாட்டத்தை குறைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள அவர், நகர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’