பேங்கில் இருந்து பேசுவதுபோல் பேசி மக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பர்களை வாங்கி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த இளைஞரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பலரது மொபைல் எண்ணிற்கும், தங்கள் வங்கி ஏடிஎம் கார்டு லாக்காகி விட்டது எனக்கூறி அவர்களின் ஏடிஎம்மில் இருந்து திருட்டுத்தனமாக பணம் எடுக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக சென்னை சைபர்கிரைம் போலீசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. எனவே இந்த புகார்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததோடு, மோசடி கும்பலையும் வலைவீசி தேடிவந்தனர்.
குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இதனிடையே நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வம் என்பவர் மகன் வளன் ராஜ்குமார், அதே பகுதியில் ஆன்லைன் பிசினஸ் செய்வதாகக்கூறி பல்வேறு விளம்பரங்கள் செய்து தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் போனில் பேசியவாறே, மக்களிடம் ஏடிஎம் கார்டு நம்பர்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பந்துவீச்சில் அதிரடி காட்டிய நியூசிலாந்து: 165 ரன்களில் சுருண்டது இந்தியா..!
இதனால் இவரை சென்னை மைலாப்பூர் சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மாற்று குரலில் அதாவது பெண்கள்போல் பேசியும் பலரிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கையும் சைபர்கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர். அந்த கணக்கில் சுமார் ரூபாய் 8 லட்சம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரை தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட மேலும் சிலரை சைபர்கிரைம் போலீசார் விசாரித்தும் தேடியும் வருகின்றனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு