சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதிதா என்ற மாணவி முதுநிலை இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு அவரது துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது. மாணவி இறந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாகியும் பல்கலைக்கழக துணை வேந்தர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
எனவே மாணவி தற்கொலை விவகாரத்தை மறைக்க பல்கலைக்கழகம் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி விடுதி முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி இறப்பு குறித்து முழுமையான தகவலை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் தேர்வு..!
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’