மான்கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகாகவி பாரதியின் பாடலை பாடி மொழியின் சிறப்புக் குறித்து பேசினார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்காக ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று பேசிய பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசினார். இந்திய நாட்டின் கலாசாரம், மொழி குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், மொழியின் சிறப்பு குறித்து விளக்குவதற்காக மகாகவி பாரதியின் பாடலை பாடி மேற்கோள் காட்டினார். அதில்
அதில், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் புலவர் பாரதியார் மொழி குறித்து பாடியுள்ளார். இந்தியாவிற்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று மட்டுமே என்றும், 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என்று பாரதி கூறியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
மேலும் பாரதியின் கவிதையான
''முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்''
என்பதையும் தமிழில் மோடி மேற்கோள் காட்டி குறிப்பிட்டார்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி