தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார். இவர் முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்க மாட்டார். பும்ரா பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து காயம் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார். அத்துடன் பிசிசிஐயின் மருத்துவக் குழு பும்ராவின் காயத்தை கண்காணிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!