எங்களுடன் விளையாடுங்கள் என்று இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிடமும் கெஞ்சிக் கொண்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக இருதரப்பு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும், சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் அவ்வப்போது மோதியுள்ளன. உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் 6 போட்டிகளிலும், டி20 உலகக் கோப்பையில் 5 போட்டிகளிலும் மோதியுள்ளன.
எல்லை ரீதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்களுடன் கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்தியா உள்பட எந்த ஒரு நாட்டுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. கண்ணியமான முறையில், இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் மீண்டும் நடைபெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு பின் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறேன்.” என்றார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?