திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட விரகனூர் கோழிமேடு, புளியங்குளம், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அத்துடன், புளியங்குளம், சிலைமான் பகுதிகளில் பெண்கள் மத்தியில் ஸ்டாலின் திண்ணைப் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஸ்டாலினுடன் அங்கிருந்தவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தேர்தல் திருப்பத்தைத் தர வேண்டும் என்று மக்களிடையே பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என்று உறுதியளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஸ்டாலின், தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?