சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 170 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 15வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 13 (18) ரன்கள் எடுத்திருந்தபோது தோனியிடம் கேட்ச் ஆனார்.
அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். இதற்கிடையே வந்த யுவராஜ் சிங் வந்த வேகத்தில் 4 (6) மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த குருனல் பாண்ட்யா சூர்யகுமாருடன் சேர்ந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டார். மும்பையின் ஸ்கோர் 112 ரன்கள் இருந்தபோது குருனல் பாண்ட்யா 42 (32) ரன்களில் வெளியேறினார். அரை சதம் அடித்த சூர்யகுமார் 59 (43) ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிரான் பொல்லார்ட் சில சிக்ஸர்கள் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 25 (8) ரன்களுடனும், பொல்லார்ட் 17 (7) ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை