ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “ நியூட்ரினோ திட்டம் தொடர்பாக உரிய அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெறுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதி பெற்ற உடன் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும் என்றார். மேலும் இரண்டாவது அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான பணிகள் நடைபெறுகையில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2015ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டு நியூட்ரினோ திட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை