இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் இருவர் பயணி ஒருவரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராஜீவ் கத்யால் என்ற பயணியை இண்டிகோ விமான நிறுவன பேருந்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில், பயணி ராஜீவ் கத்யாலை கீழே தள்ளிய இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், அவரது குரல்வளையை மூர்க்கத்தனமாக நெறித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஊழியர்கள் இருவரை பணியை விட்டு நீக்கிவிட்டதாகவும், இச்சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இண்டிகோ விமான நிறுவனத் தலைவர் ஆதித்யா கோஷ் தெரிவித்துள்ளார்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?