கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இவர்களில் ஒரு பெண், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பெண்ணின் கணவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக வட்டிக்கு பணம் கொடுத்த தளவாய் ராஜ் என்பவரை கைது செய்த போலீஸார், மேலும் இருவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில் கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
அதுகுறித்து காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், புகார் தொடர்பாக மனுதாரர் சுப்புலட்சுமி மற்றும் எதிர்மனுதாரர் முத்துலட்சுமி ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக கடந்த மாதத்தில் 3 முறையும், இந்த மாதத்தில் ஒருமுறையும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேபோல், பதிவுத் தபால் மூலமும் அழைப்பாணை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. ஆனால், மனுதாரர் ஊரில் இல்லை என்பது தெரியவந்ததாகவும், எதிர்மனுதாரர் முத்துலட்சுமி மட்டுமே விசாரணைக்கு ஆஜரானதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக, காசிதர்மம் தற்காலிக குடியிருப்பில் சுப்புலட்சுமி இல்லை என்று கிராம நிர்வாக அலுவலரும் சான்று வழங்கியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?