திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியலுக்காக பொய்யான தமிழ் மொழிப்பற்றை வெளிப்படுத்துகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்துவதற்காக பாஜக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை சென்னை சாலிகிராமத்தில் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை மட்டும் குறைகூறுவதில் குறியாக இல்லாமல், டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து கட்சியினரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எந்தக் கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்குக் கிடையாது என்றும், தங்களை பலப்படுத்துவதே இலக்கு என்றும் கூறினார்.
அரசியலில் பிழைக்க முடியாததால் ஸ்டாலின் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். இந்தி மொழியை வைத்து, மீண்டும் அரசியல் செய்யலாம் என ஸ்டாலின் நினைக்கிறார் என தமிழிசை சாடினார். ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது மதிப்பும், மரியாதையும் உள்ளதாகவும் எந்த மொழி வந்தாலும், தமிழை அழிக்க முடியாது எனவும் தமிழிசை தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!