தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடகரையை சேர்ந்த சக்திவேல் என்பவர் மது போதையில் அவரது தாயாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே காரணமாக உள்ளது என்று கூறினார். இந்த வழக்கில் மத்திய அரசின் கேபினட் செயலர், தமிழக உள்துறை செயலர், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோரை எதிர் மனுதாரராக சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியின்படி மதுவிலக்கிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். மதுவால் தமிழக அளவிலும், நாடு முழுவதும் எவ்வளவு குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்த முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கேட்டுள்ளார். சிறுவர்களுக்கு மது எளிதில் கிடைப்பதைத் தடுக்கும் சட்டத்தை ஏன் கடுமையாக அமல்படுத்தக்கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை