ஓமலூர் அருகே பள்ளி வகுப்பை கட் அடித்த அரசுப்பள்ளி மாணவிகள் 4 பேர் தங்களை கடத்திவிட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 6ம் வகுப்பை சேர்ந்த 3 பேரும், 7ம் வகுப்பு மாணவி ஒருவரும் நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை என்பதை, சக மாணவியர் மூலம் அறிந்து கொண்ட பெற்றோர், மாணவியர்களை தேடி பள்ளிக்கு வந்தனர். அப்போது வெள்ளாப்பட்டி சாலையில் ஓடிவந்த மாணவியர் நால்வரும் தங்களை சிலர் கடத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கூறினர். நான்கு மாணவிகளையும் போலீஸார் விசாரிக்கும்போது, நால்வரும் நடந்தே வெள்ளாளப்பட்டி வரை சென்று அங்குள்ள கோயில் நிலத்தில் விளையாடியதும், பெற்றோருக்கு பயந்து, தாங்கள் கடத்தப்பட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. பின்னர் போலீஸார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை