அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாடு பிடி வீரர்களுடன், காளைகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக மாடுபிடி வீரர்களுடன், ஜல்லிக்கட்டு காளைகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் பிப்ரவரி 10ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதையொட்டி காளைகளுக்கு நீச்சல் , நடைப்பயிற்சி, வடம்போட்டு பழக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு பகுதியில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளும் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குவதற்கான பயிற்சிகளை மாடு பிடி வீரர்களும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு