விவேகம் படத்தின் காதலாடா மூன்றாவது சிங்கிள் ட்ராக் நேற்று வெளியானது.
இந்நிலையில் காதலாடா முழுப்பாடல் வரிகளும் இன்று யு-டியூப்பில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. முன்பு வந்த சர்வைவா, தலை விடுதலை பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் மூன்றாவதாக இப்பாடல் வெளியாகி இருக்கிறது. அஜீத்துக்காக கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப்பாடலை அனிருத் ரவிச்சந்திரனுடன் ப்ரதீப் குமார், ஷாசா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.
’உன்னோடு வாழ்வது ஆனந்தமே..ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே எனத் தொடங்கும் பாடலுக்கு கர்நாடக சங்கீதத்தில் இசையமைத்திருக்கிறார் அனிருத். இந்த வீடியோவில் அஜீத்துடன் காஜல் அகர்வால் இடம் பெற்றுள்ள சில நிமிட காட்சிகளும் வந்து போகின்றன.
இந்நிலையில், விவேகம் படத்தில் பணியாற்றியது குறித்து அனிருத் கூறுகையில், சர்வைவா, தலை விடுதலை பாடல்களை கேட்டுவிட்டு அஜித் எனக்கு போன் கால் செய்து ’உங்களுடன் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது’ எனச் சொன்னார். இதனால் கண்கலங்கி விட்டேன். நான் ஒரு அஜித் ரசிகன். அவர் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!