தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மம்தாவும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘’ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை அவமானமாக மம்தா பானர்ஜி கருதுகிறார். பலரும் இந்த கோஷத்தால் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் மம்தா மட்டும் ஏன் அவமானமாகக் கருதுகிறார். ஏனென்றால் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வாக்குகளை வாங்க வேண்டும். தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் அவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புவார். இந்த ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை இங்கு எழுப்பாமல் பாகிஸ்தானுக்கு சென்றா எழுப்ப முடியும்.
130-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், திரினாமுல் காங்கிரஸ் KADCHIYI குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கொலைகாரர்கள் ஒவ்வொருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மோடியுடன் எப்போதும் மம்தா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.
மம்தாவின் முழு கவனமும் அவரது மருமகனை அடுத்த முதல்வராக்குவதிலேயே உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் தற்போது சில முக்கிய தலைவர்கள் இல்லாமல் போயிருந்தால், மம்தா தனது மருமகனையே அடுத்த முதல்வராக அறிவித்திருப்பார். இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்" என்று பேசினார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்