தேசியக் கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவில் பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “
தேசியக் கட்சிகள் உதவி இல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலமும் இயங்க முடியாது. எந்த பொருள் வேண்டும் என்றாலும் மத்திய அரசாங்கமிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது.” என்றார்
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் “தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை” என்பது தொடர்பாக கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பியபோது, “ அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அறியாமல் கூறிவிட்டார்.
தேசிய கட்சிகளை அனுசரித்துதான் மாநில கட்சிகள் இருக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது . ஒருவேளை அவர் தனிக்கட்சி துவங்குவதற்காக இப்படி பேசுகிறாரோ என்னவோ என தெரியவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இது குறித்து எதுவும் பேசவில்லை சரியாகத்தான் இருக்கிறார்கள். தேசிய கட்சிகளின் உதவி இல்லாமல் இயங்க முடியும் என்றால் தேசிய கட்சிகளை வேண்டாம் என்று கூறியிருக்கலாம். அவர் அவ்வாறு கூறவில்லை. இது வாழைப்பழம் காமெடிபோல உள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “பாஜக தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு முன் மாதிரியாக இருப்பார்கள்" என தெரிவித்தார்.
பாரத ரத்னா வழங்குவதற்கான பட்டியலில் பாடகர் எஸ்.பி.பி. பெயரும் இருக்கிறது. என்னாலான முயற்சிகளை தற்போது அதற்காக செய்து வருகிறேன்”என்றார்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!