ஆவின் நிறுவனம் 10 ரூபாய் விலையில் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பால் வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிய பால் பாக்கெட்டின் கொள்ளவு 225 மில்லி லிட்டராக இருக்கும். சேலத்தில் 10 கோடி ரூபாய் முதலீட்டில் ஐஸ்கிரீம் ஆலை அமைக்கப்படும். பால் கூட்டுறவு இணையங்கள் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு நாளொன்று அரை லிட்டர் ஆவின் பால் வழங்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக, தனியார் பாலில் கலப்படம் இருப்பதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் அதிரடி புகாரைக் கிளப்பினார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவரின் குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மறுத்து வந்தன. அவர் தனியார் பால் நிறுவனங்கள் மீது புகார் கூறுவதற்கும் சமீபத்தில் தடை விதித்த நீதிமன்றம், ஆதரமில்லாமல் புகார் தெரிவிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் 10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!