சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறு செய்ததாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஸ்ரீராம் என்பவர் நட்சத்திர ஓட்டலில் மதுகுடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா, ஸ்ரீராமை பார்த்து மது வாங்கி வரும்படி தகராறு செய்து அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சூர்யா மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போன்று, திருச்சி சிவாவின் மகன் சூர்யாவும் புகார் கொடுத்துள்ளார். அதில், பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்து கொண்டபோது, தனது நண்பரின் கையில் இருந்த மதுபாட்டிலை ஸ்ரீராம் பிடுங்கியதாகவும், அதை தட்டிக் கேட்டதும் கத்தியை கொண்டு தன்னை மிரட்டியதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
இரண்டு புகார்களையும் பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை காவல்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாருக்கு ஆளான சூர்யா, திமுக எம்.பி. திருச்சி சிவாவை விட்டு பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்