ஒடிசாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு சட்டப்பேரவையில் பாராட்டு மற்றும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் களமிறங்கிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் லட்சுமணன் 14 நிமிடம் 54.48 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சக வீரர் கோபியின் சவாலை முறியடித்து லட்சுமணன் முதலிடம் பிடித்தார். 2 தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்த லட்சுமணன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இரட்டை தங்கம் வென்ற லட்சுமணனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தப் போட்டியில், ஒரே நாளில் இந்தியாவுக்கு மொத்தம் 8 பதக்கம் கிடைத்துள்ளது. தங்கம் வென்ற லட்சுமணனுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த 2013-ம் ஆண்டு உஹானில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் லட்சுமணன் வெண்கலப்பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?