உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள மமுரா பகுதியில் 27 வயது பெண் ஒருவர் தனியார் க்ளினிக்கிற்கு திங்கட்கிழமை காலை பிரசவத்திற்காகச் சென்றிருக்கிறார். அந்த மருத்துவருக்கு சரியாக பிரசவம் பார்க்கத் தெரியாததால், தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர்.
இதனால் பதற்றமடைந்த அந்த மருத்துவர் தாயையும், குழந்தையையும் க்ளினிக்கிற்கு வெளியே இழுத்துக் கொண்டுவந்து எறிந்துவிட்டு, க்ளினிக்கை பூட்டிச் சென்றுவிட்டார்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனே சென்றிருக்கின்றனர், விசாரித்ததில் அந்த மருத்துவர் தலைமறைவாகியது தெரியவந்தது. அந்த மருத்துவமனை குறித்து விசாரித்தபோது, இன்னும் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும், அந்த பெண் போலி மருத்துவர் என்றும் தெரியவந்துள்ளது.
அந்த போலி மருத்துவரின் குடும்பம் மமுராவில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவருவதாகவும், அவருடைய கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணிடம் மருத்துவர் சான்றிதழ் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
மரவள்ளி பயிர்களுக்கு இடையே கஞ்சாசெடி வளர்ப்பு: கள்ளக்குறிச்சி நபர் கைது.!
இதனால் நொய்டாவின் போலீஸ் ஏடிசிபி அன்கூர் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தலைமறைவாகி உள்ள அந்த போலி மருத்துவரைத் தேடிவருகின்றனர். அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டதற்கு இந்திய சட்டப்பிரிவு 304ஏ இன் கீழ் அந்த பெண்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை