சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜார் அலி. இவர் அதே பகுதியில் உள்ள 12 வயது சிறுவனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவனின் பெற்றோர் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நிஜார் அலி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இளைஞர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து குற்றவாளியை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!