தொற்றுநோய் பரவலால் இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதரம் மற்றும் மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அடுத்தடுத்து இதுவரை நான்கு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஊரடங்கு செப்டம்பர் 25லிருந்து தொடங்குகிறது என ஆன்லைனில் ஸ்க்ரீன் ஷாட்டுடன் பெரிதும் பகிரப்பட்டு வந்த செய்தி போலியானது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டமிடல் ஆணையத்துடன் இணைந்து மத்திய அரசு, 46 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தவிர மற்ற அனைத்துக்கும் தடைவிதிக்க என்.டி.எம்.ஏ முன்கூட்டியே திட்டமிட உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை எனவும் பிஐபி தெரிவித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிகம் பாதித்த நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்திய பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஊரடங்கை தளர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அனைத்து பாதுகாப்புகளுடனும் மக்கள் இயங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்