இரட்டை வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறினார்.
அண்மையில் கொண்டுவரப்பட்ட கேளிக்கை வரி சட்ட திருத்த மசோதா மூலம் சினிமா டிக்கெட்டிற்கு உள்ளாட்சி வரி 30 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 58 சதவீதம் வரிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்றும் திரைப்படச் சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தன. இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் சில இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரையரங்குகளை மூடும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை எழுந்த நிலையில், அதுபற்றி ஆலோசிக்க இன்று காலை தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் திரைப்பட வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர், திட்டமிட்டபடி நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அபிராமி ராமநாதன் அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 1000 தியேட்டர்கள் மூடப்படுகின்றன. கோரிக்கை நிறைவேறும்வரை படக்காட்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!