புழல் சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியை, போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
புழல் மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் நன்னடத்தை அடிப்படையில், நாள்தோறும் 10 முதல் 20 கைதிகள் வரை சிறைக்கு வெளியே, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, புதர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு தண்டனை கைதிகள் 7 பேர் சிறைக்கு வெளியே தோட்ட வேலை செய்தனர். பின்னர் திரும்பிய கைதிகளில் ஜெயராஜ் (38) என்ற கைதியை மட்டும் காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள் அக்கம் பக்கத்தில் தேடினர். காணவில்லை.
ஜெயராஜ், வளசரவாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர். 2008-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் கைதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வளசரவாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று தேடினர். அப்போது ஜெயராஜ் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி