ஈரோடு அருகே பாட்டியையும், தந்தையையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சொத்துத்தகராறில் நடந்துள்ள இந்த கொலை ஈரோடு வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
ஈரோட்டை அடுத்த சித்தோடு வசுவபட்டியை சேர்ந்தவர் பாவாயி. இவரது மகன் பழனிச்சாமி. இருவரும் வீட்டில் இருந்த போது அங்கு வந்த பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார், தந்தையின் பல கோடி ரூபாய் சொத்துகளை தன் பெயரில் மாற்றித்தருமாறு கேட்டதாகத் தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பாட்டி பாவாயியையும், தந்தை பழனிசாமியையும் சுட்டார். குண்டுபாய்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
இதன்பின் சம்பவ இடத்திலிருந்து இருந்து தப்பியோடிய சந்தோஷ் குமார் தலைமறைவானார். சம்பவம் குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் சந்தோஷ் குமார் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?