உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உறவினர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் 40 வயது நபர் ஒருவர் தீவைத்து கொளுத்தப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் விரோசாபாத் மாவட்டத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் ராகேஷ் வர்மா. இவருக்கும் ராபின் எனும் தன்னுடைய உறவினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராகேஷ் வர்மா கடைக்கு வந்த ராபின் அவரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் தான் கொண்டு வந்த எரிபொருளை ராகேஷ் மீது ஊற்றி, அவருக்கு தீ வைத்துள்ளார்.
ராகேஷின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகேஷ்க்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவைத்து தப்பியோடிய உறவுக்காரரான ராபினை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?