நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப்பிறகு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டின் தேர்தலை தள்ளிவைத்துள்ளார் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று வேகமாக உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் திண்டாடிக்கொண்டிருக்கும்போது நியூசிலாந்து நாட்டின் இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திறமையாக கையாண்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அங்கு மொத்தமே 1500-க்கும் குறைவான கொரோனா தொற்றுதான் பதிவாகியிருந்தது. இதுவரை 14 மரணங்களே நிகழ்ந்துள்ளன. கொரோனா தொற்று முழுமையாக இல்லாததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெசிந்தா ஆர்டென் ஊரடங்கை முழுமையாக தளர்த்தினார். அதோடு, சுற்றுலா தலங்களையும் திறந்திருந்தார். இந்நிலையில் , 102 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று வந்ததால் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தல் நடக்கவிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வந்ததால், அத்தேர்தலை அக்டோபர் மாதம் தள்ளி வைத்துள்ளார் ஜெசிந்தா ஆர்டென். ‘மீண்டும் தேர்தலை தள்ளி வைக்கமாட்டேன். அக்டோபரில் நிச்சயம் நடக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'