கன்னடர்களை அவமானப்படுத்தியதாக தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்தவர் சாத்விக் சச்சார். பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஹெச்.ஆர் அதிகாரியாக பணியாற்றுகிறார். சஞ்சய் நகரில் வசிக்கும் இவர், நேற்று முன் தினம் ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் செய்தார். குறிப்பிட்ட நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக வந்த டெலிவரி பணியாளர் அனிலை ஆங்கிலத்தில் திட்டினார் சச்சார். அவர், எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கன்னடத்தில் சொன்னார். இதையடுத்து ’கன்னடர்கள் எல்லாருமே சோம்பேறிகள்’ என்றும் ’மோசமான கன்னட மொழியை இங்கு பேசாதே’ என்றும் அந்த அதிகாரி சொன்னாராம்.
இதையடுத்து கன்னடர்களையும் கன்னட மொழியையும் இழிவுபடுத்தியதாக சஞ்சய் நகர் போலீசில் அனில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த தனியார் நிறுவன அதிகாரியை கைது செய்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!