ஹரியானாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 வயது கைதி தற்கொலை செய்துகொண்டார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தின் ஷாஜகான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சோனு. இவரைக் கடந்த 14ஆம் தேதி அம்மாவட்ட போலீஸார் கைது செய்தனர். ஷார்ஜகான்பூர் கிராமத்தினருக்கும் அருகே இருக்கும் மற்றொரு கிராமத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து இரு கிராமத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் சோனு. அவரை ஃபரிதாபாத்தில் உள்ள நீம்கா சிறையில் அடைத்திருந்தனர். சோனுக்கு கடந்த புதன் கிழமை அன்று காவல்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வைத்தனர். சோதனை முடிவுகள் இன்று வெளியாகி அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இதனால் சோனு மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் தனது சிறை அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை அறிந்த சோனு கிராமத்தினர் சாலைகளை மறித்து, காவல்துறையினர் மீது கற்களை எறிந்தனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!