ஜிஎஸ்டியின் 28% வரியால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மின்விசிறியின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது மின் விசிறிகளுக்கு 12 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டியில் அது 28 சதவிகிதமாக உயர்த்தப்பட உள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் மின் விசிறிக்கு ஏர் கண்டிஷனர் அளவுக்கு வரி விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது என உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே போல் ஜிஎஸ்டி வரி முறையால் தமிழகத்தில் 8 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இது குறித்து பேசிய இச்சம்மேளனத்தின் தலைவர் மதிவாணன், ஜவுளி ரகங்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். இதனால் நாட்டில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் எனவே அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான 17ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மேலும் பல பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட இருக்கிறது. கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!