தமிழகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களும் கூடுதல் அரிசி வழங்குவதற்கு தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அரிசி அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குரிய ரேசன் பொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது. இந்த நிலையில், முன்னுரிமை உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதல் அரிசி மற்றும் பருப்பு வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கும் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், தலா ஒரு கிலோ பருப்பும் வழங்குவதற்கு மத்திய அரசு ஆணையிட்டது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாதந்தோறும், முன்னுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே குறைந்த விலையில் அரிசி வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் முன்னுரிமை இல்லாத அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்திய உணவு கழகத்திலிருந்து 84 கோடி ரூபாய் செலவில் கூடுதல் அரிசி பெற்று அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குரிய கூடுதல் அரிசியை மே மற்றும் ஜூன் மாதங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
ஊருக்கு போக வழியில்ல.. பசிக்கு உணவு இல்ல.. மதுரையில் தவிக்கும் தொழிலாளர்களின் அவலநிலை
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்