சீர்காழி அருகே ஊரடங்கை கண்காணித்த காவல்துறை ட்ரோன் கேமராவை கல்வீசித் தாக்க முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிபவர்களை போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி எடமணல் கிராமத்தின் வயல் வெளியில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அவர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.
இதனை அறிந்த அனைவரும் வயல்வெளியில் இருந்து தப்பியோடினர். அதில் ஒருவர் ட்ரோன் கேமரா மீது கல்லால் தாக்க முயற்சித்தார். ஆனால் கேமரா அருகே வந்ததும் அவரும் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வயல் வெளியில் கிரிக்கெட் விளையாடிய 10 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்த சீர்காழி போலீசார் அவர்ளை வீட்டிலிருப்போம், விலகியிருப்போம், கிரிக்கெட் விளையாட மாட்டோம் என உறுதி மொழி ஏற்கவைத்து எச்சரித்து அனுப்பினர்.
மேலும் கேமராவை தாக்க முயற்சித்த எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்