சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற இங்கிலாந்து அணி 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
கார்டிஃப் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் கலக்கிய பாகிஸ்தான் அணியினர், இங்கிலாந்து அணியை 49.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 46 ரன்களும், பாரிஸ்டோவ் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி, தனது இன்னிங்ஸில் ஒரு சிக்ஸர் கூட விளாசவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளும், ஜுனைத் கான் மற்றும் அறிமுக வீரர் ரம்மன் ரயீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்