சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கார்டிஃப் நகரில் நடந்த போட்டியில் 311 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பிளெங்கெட் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 310 ரன்கள் எடுத்தது. அந்த அணியைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, கோரே ஆண்டர்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால், இங்கிலாந்து அணி அரையிறுதியை உறுதி செய்தது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்