சென்னையில், சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த 8ஆம் வகுப்பு மாணவனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம், கவரை தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தனது வீட்டிலிருந்து சித்தி வீட்டிற்கு நடந்து சென்ற போது, 10,000 ரூபாய் பணம் சாலையில் கேட்பாரற்று இருந்ததை விக்னேஷ் பார்த்துள்ளார்.
இதனையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு சித்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், சித்தியை அழைத்துக் கொண்டு குமரன் நகர் காவல் நிலையத்திற்கு வந்து 10,000 ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் சாலையில் கிடந்த 10,000 ரூபாய் பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் போலீசார் சிறுவனை வெகுவாக பாராட்டினர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?