விருத்தாசலம் அருகே 25-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறி நாயை உடனே பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று, சாலையில் தனியாக செல்லும் நபர்களை துரத்தித் துரத்தி கடித்துக் குதறுகிறது. அத்துடன் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால், மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் வீட்டிலேயே கட்டி வைத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஷோ ரூமிற்குள் புகுந்து பைக்குகளை உடைக்கும் ஆசாமி..!
அந்த நாய் கடித்ததில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 25-க்கும் மேற்பட்டோர் கார்மாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார். தேவராஜ், ரவி, தர்மலிங்கம், சிறுமி இளம்பிறை என நாயிடம் கடி வாங்கியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
‘குட்டி’ இறந்தது தெரியாமல் எழுப்ப முயலும் ‘தாய் யானை’ - கலங்க வைத்த பாசப்போராட்டம்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியில் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளிகளும் நாயிடம் இருந்து பாதுகாப்புடன் இருப்பதற்கு கையில் தடியுடன் செல்கின்றனர். அனைவரையும் கடிக்கும் வெறி நாயை உடனே பிடித்து தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!