இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல்பகுதியில் நேற்றிரவு 9.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலாவசி என்ற தீவிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, ஆழிப்பேரலை எழும் என்ற அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தோனேசியா அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனாடோ என்ற நகரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் திரண்டனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 ரிக்டர் அளவுக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!