இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மதம் குறித்து பேசி பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேனான சோயப் மாலிக் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சானியா மிர்ஸாவின் கணவரான சோயப் மாலிக், சமூக வலைதளமான ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களைப் பொறுத்தவர இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வியை மாலிக்கிடம் எழுப்பினார். அந்த கேள்விக்குப் பதிலளித்த மாலிக், இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமிதான் சிறந்த பந்துவீச்சாளர். அவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. அவர் பந்துவீச்சினை உன்னிப்பாக கவனித்தவன் என்ற முறையிலும், அதனை எதிர்கொண்டு விளையாடிய அனுபவம் உள்ளவன் என்ற முறையில் இதனை நான் கூறுகிறேன் என்று மாலிக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலிக்கின் இந்த பதிவினை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். பந்துவீச்சாளர் குறித்து பேசுகையில் மதம் குறித்து பேச வேண்டிய அவசியமில்லையே மாலிக் சார் என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்