போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான பணி முறிவு நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஊதியம் மற்றும் பதவி உயர்வு, பணியிடங்களை குறைக்க கூடாது, மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒருவாரத்திற்கும் மேலாக அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிடில் பணிமுறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணி முறிவு நடவடிக்கை திரும்ப பெறப்படுகிறது என்றும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்