ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சிதம்பரத்திற்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன் என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஒரு பொறுப்புமிக்க குடிமகன், எம்.பி என்பதால் ஜாமீன் கிடைத்தாலும் தான் எங்கும் செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் ஐஎன்எக்ஸ் வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்