மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஒரே கார்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
மக்கள் பதிவேடு அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அரசு திட்டங்களின் நன்மைகள் மக்களை சென்றடையவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பான பயிற்சி அல்ல. தேசிய மக்கள் தொகை பதிவு என்பது நாட்டில் உள்ள பல பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவும்.
டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும். அதனால், காகித பயன்பாட்டில் இருந்து டிஜிட்டலுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மாறவுள்ளது” என்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்