குப்பைகளை தின்ன வரும் காட்டு யானையிடம், சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுப்பது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பகுதி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒடி அமைந்துள்ளது. தொரப்பள்ளியில் வீசப்படும் குப்பைகளை தின்பதற்காகத் தினமும் முதுமலை வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டு யானைகள், ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளது. மாலையில் தொரப்பள்ளி பகுதிக்குள் நுழையும் இந்த யானைகள் அதிகாலை தான் வனப்பகுதிக்குள் மீண்டும் செல்கின்றன. குறிப்பாக மக்னா யானை ஒன்று சாலையில் நடந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
தொராப்பள்ளி பகுதியில் மாலை நேரங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இருப்பது வழக்கம். இந்த நிலையில் சாலையில் நடந்து வரும் மக்னா யானையிடம் செல்பி எடுப்பதை அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். குப்பை தொட்டிக்கு வந்து குப்பைகளை சாப்பிடும் அந்த யானைக்கு அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற விபரீத முயற்சியால் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இப்படி செல்ஃபி எடுப்பவர்களை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்