விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் திட்டம் மற்றும் விளைநிலங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில், இன்று தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கும், கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ஐஜேகே நிறுவனத் தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதனிடையே இன்று தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ மாணவிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!