தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்தாண்டு ஜுன் 8-ஆம் தேதி (நாளை) தொடங்கக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 6 நாட்கள் தாமதமாகி 7 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே இந்திய வானிலை தெரிவித்திருந்தது. இதையடுத்து ஒரு நாள் தாமதமாக 8 ஆம் தேதி (நாளை) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளதாகவும், மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அதன் காரணமாக நாளை கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலை 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!