திருச்சியில் காவலர் உயிரிழந்த போதை மறுவாழ்வு மையத்தில் மருத்துவக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.
திருச்சி கே.கே.நகரில் LIFE CARE என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மனநல மருத்துவர் மணிவண்ணன் என்பவர் இந்த மையத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த மையத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். சேர்க்கப்பட்ட 3 நாள்களில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மறுவாழ்வு மையத்தினரே சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மறுவாழ்வு மையத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது.
மறுவாழ்வு மைய ஊழியர்கள் நோயாளிகளை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்கள் இணைந்து சங்கிலிகளை அகற்றி நோயாளிகளை மீட்டதோடு அந்த மறுவாழ்வு மையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், மனநல மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் மருத்துவக்குழு அந்த போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தி வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!