பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் கைதானவர்களில் 7பேரின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பு செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அமுதா கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அமுதாவின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனால் தற்போதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன், அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி ஆகிய 7 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து சிபிசிஐடி போலீசார் 7 பேரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி வடிவேல் 7 பேரையும் வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 7 பேரும் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேரும் ஏற்னெனவே ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். இவர்களது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி